சனி, 14 மே, 2011

ஆங்கில மருத்துவம் விழி பிதுங்கி நிற்கும் 51 வியாதிகள்

ஆங்கில மருந்துகள் எந்தப் பயனும் அற்றவை என்பதையும் பல நோய்களுக்கு ஆங்கில மருத்துவத்தில் மருந்தே இல்லை என்பதையும், அந்த நோய்களைக் குணப்படுத்துவோம் என்று சொல்லக்கூடாது என்றும் இந்திய அரசு நிறைவேற்றிய சட்டத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.

Drugs“Drugs and Cosmetics Act, 1940, 1945, 1995, ‘Schedule J’ contains a list of 51 disease and ailments (by whatever name described) which a drugh may not purport to prevent or cure or make claims to prevent or cure”.

‘மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டம்’ 1940ல் இயற்றப்பட்டு பின்னர் 1945, 1995ல் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தில் ஷெட்யூல் - ‘J’ என்ற பிரிவின் கீழ் 51 வகை ஆங்கில மருத்துவத்தின் வியாதிகள் எழுதப்பட்டுள்ளன. இந்த வியாதிகள் ஆங்கில மருத்துவத்தின் மருந்துகளைக் கொண்டு குணப்படுத்த முடியும்!’ என்றோ, ‘மருந்துகளைக் கொண்டு குணப்படுத்திக் காட்டுகிறேன்!’ என்றோ கூறுதல் கூடாது என்று எச்சரிக்கிறது.

நோயால் வாடும் மக்களின் நன்மைக்காக, அவர்கள் உயிர்களும், உடமைகளும் காக்கப்பட வேண்டும் என்பதற்காக நமது அரசாங்கம், ஆங்கில மருத்துவத்தால் குணப்படுத்த முடியாத நோய்கள் மொத்தம் 51 என்று மேற்சொன்ன சட்டத்தில் ஷெட்யூல் - Jயில் வலியுறுத்தியுள்ளது. இந்த 51 வியாதிகளையும் ஆங்கில மருத்துவர்கள் எவரும் தங்கள் மருந்துகளால், குணப்படுத்த முடியும் என்றோ, குணப்படுத்திக் காட்டுகிறேன் என்றோ கூறுவது சட்டப்படி குற்றமாகும் என்று எச்சரிக்கிறது.

இந்த 51 நோய்களும் ஆங்கில மருத்துவத்துக்கு மட்டுமே சொந்தமானவை. நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக புதுப்புது நோய்கள் இந்த ‘லிஸ்ட்’டில் சேரும் வாய்ப்பு எக்கச்சக்கமாக உள்ளது. இந்த வகையில் சமீபத்தில் புதிதாக சேர்க்கப்பட்டிருக்கும் நோய்கள் ‘எய்ட்ஸ், சார்ஸ்’ ஆகும். சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடித்த ஹெப்படைட்டிஸ் என்ற ஒரு நோயும் இதிலே அடக்கம் செய்யப்பட்டு விட்டது.

இவ்வாறாக, ஆங்கில மருத்துவம், தான் கண்டுபிடித்த நோய்கள் ஒவ்வொன்றையும் ஆதி முதல் அந்தம் வரை ஒவ்வொன்றாக அவற்றைக் குணப்படுத்த மருந்துகள் இல்லை என்பதை தெளிவாக உணர்ந்து அந்த நோய்களை அடக்கம் செய்து கொண்டு வரும் வேளையில் இதை மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவும், அதாவது, ஆங்கில மருந்துகளில் எந்த ஒரு மருந்தும் ஷெட்யூல்-J-யில் பட்டியலிடப்பட்டுள்ள ஆங்கில மருத்துவத்தில் நோய்களைக் குணமாக்காது என்பதை அந்த மருத்துவம் சர்வதேச அளவில் ஒப்புக்கொண்டு அதை பகிரங்கமாக அச்சிட்டிருக்கிறது என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்தவேண்டும் என்பதற்காகவும், எனவே, ஆங்கில மருத்துவம் பார்க்கும் எந்த ஒரு மருத்துவரும், ஆங்கில மருத்துவத்தில் மருந்து என்பதே கிடையாது என்ற உண்மையான காரணத்தினால் ஷெட்யூல்-Jயில் உள்ள நோய்களுக்கு மருத்துவம் பார்க்கக் கூடாது என்பதற்காகவும்,

ஆங்கில மருத்துவம் இந்த 51 நோய்களுக்கும் குணப்படுத்தவோ தடுக்கவோ, கட்டுப்படுத்தவோ மருந்துகள் இருக்கிறது என்று கூறுவது தவறான, ஆபத்தான போக்கு. நோயால் அவதியுறும் மக்களுக்கு பெரும் ஆபத்தாக முடியும் என்பதை எச்சரிப்பதற்காகவும், உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுரையின் பேரில் நமது அரசாங்கமும் தகுந்த எச்சரிக்கையுடன் ஆங்கில மருந்துகளை ‘மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டத்தின்’, பிடியில் ஷெட்யூல் -J-யில் ஆங்கில மருத்துவம் வைத்தியம் பார்க்கக் கூடாது என்று 51 நோய்கள் அடங்கிய பட்டியலைச் சேர்த்திருக்கிறது.

ஷெட்யூல் J-யில் ஆங்கில மருத்துவம் வைத்தியம் பார்க்கக் கூடாது என்று வரையறுக்கப்பட்டுள்ள 51 நோய்களில் விவரம் வருமாறு.

1. எய்ட்ஸ்

2. நெஞ்சுவலி

3. ‘அப்பெண்டிஸைட்டிஸ்’ என்னும் குடல் வால் நோய்

4. இருதய இரத்தக் குழாய்களில் அடைப்பு

5. தலை வழுக்கை

6. கண்பார்வை அற்ற நிலை

7. ஆஸ்துமா

8. உடலில் தோன்றும் கட்டிகள் முதலாக புற்றுநோய் வரை

9. கண்புரை

10. தலைமுடி வளர, நரையை அகற்ற

11. கருவில் வளரும் குழந்தையை ஆணாகவோ, பெண்ணாகவோ மாற்றுவோம் என்று கூறுவது.

12. பிறவிக் கோளாறுகள்

13. காது கேளாமை

14. நீரிழிவு நோய்

15. கர்ப்பப் பை சம்பந்தமான அனைத்துக் கோளாறுகள்

16. வலிப்பு நோய் - மன நோய்கள் அனைத்தும்

17. மூளைக்காய்ச்சல்.

18. உடல் நிறம் கருப்பாக இருப்பினும் சிகப்பாக்குதல்.

19. மார்பக வளர்ச்சிக்கு

20. புரையோடிய புண்

21. மரபணு நோய்கள்

22. க்ளாகோமா எனும் கண்வலி நோய்

23. கழுத்து (தைராய்டு) வீக்கம்

24. ஹெர்னியா எனும் குடலிறக்க நோய்

25. அதிக மற்றும் குறைவான இரத்த அழுத்தம்

26. விரை வீக்கம்

27. பைத்தியம்

28. ஞாபக மறதி, ஞாபக சக்தியை அபிவிருத்தி செய்ய.

29. குழந்தையின் உயரத்தைக் கூட்ட.

30. சாதாரணமாக ஏற்படும் கண்பார்வைக் குறைபாடுகள் கிட்டப்பார்வை, தூரப்பார்வை.

31. ஆண் உறுப்பு வளர்ச்சி, வீரியம்.

32. பற்களை உறுதிப்படுத்த என்று, கால்ஷியம் மருந்துகள் மூலமாக வைத்தியம் பார்ப்பது.

33. மஞ்சள் காமாலை, கல்லீரல் மர்ம நோய் (ஹெபடைட்டிஸ்), மற்றும் கல்லீரல் சம்பந்தப்பட்ட எந்த நோய்களும்

34. இரத்தப் புற்றுநேரய்.

35. வெண் குஷ்டம்

36. உடலுறவில் வீரியம் அதிகப்படுத்துதல்.

37. மூளை வளர்ச்சிக்குறைவு.

38. மாரடைப்பு நோய்

39. குண்டான உடம்பு மெலிய

40. பக்க வாதம்

41. உடம்பு முழுவதும் நரம்பு நடுக்க நோய்

42. மூல நோய் மற்றும் பவுத்திரம்

43. வாலிப சக்தியை மீட்க

44. குறைந்த வயதில் முதிர்ச்சியடைந்த தோற்றம்

45. குறைந்த வயதில் தலை நரை

46. ரூமாட்டிக் இருதய நோய்

47. ஆண்மைக்குறைவு, விரைவில் ஸ்கலிதம்

48. கழுத்து வலி, மற்றும் முதுகுத் தண்டில் ஏற்படும் அனைத்து வலிகளும்

49. திக்குவாய்

50. சிறுநீரகக் கற்கள், பித்தப்பை கற்கள், சிறுநீர்ப் பை கற்கள்

51. காலில் இரத்த நாளங்கள் வீக்கம் அடைந்து புடைத்துக் காணப்படுதல்.

ஆக, மேற்கண்ட இந்த ஷெட்யூல்-J-யில் பட்டியலிடப்பட்டுள்ள இந்த 51 வியாதிகளுக்கும் ஆங்கில மருத்துவம் தங்கள் மருந்துகளால் வைத்தியம் அளித்து வருவது குற்றச்செயல் என்று அரசாங்கம் சட்டப்பூர்வமாக எச்சரித்த பின்பும் இந்த அனைத்து நோய்களுக்கும் சட்ட விதிகளுக்குப் புறம்பாகவும், மக்கள் நலனுக்கு எதிராகவும் ஆங்கில மருத்துவத்தால் பகிரங்கமாகவும், ஸ்பெஷலிஸ்ட்டுகள் என்ற பெயரிலும், விலையுயர்ந்த மருந்துகளைக் கொண்டும் ஆங்கில மருந்துக் கம்பெனிகளுக்கு கொள்ளை லாபங்களை வாரி வழங்கிக் கொண்டும் சட்ட விரோத காரியங்கள் நடந்து கொண்டிருக்கிறது.

இந்திய மருத்துவச் சங்கமும் (IMA) தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சிலும் (TMC) ஷெட்யூல் - J பற்றி பொதுமக்களுக்கு விளக்காதது ஏன்? இந்தக் குற்றச் செயல்புரியும் மருத்துவர்களை ஸ்பெஷலிஸ்ட்டுகள் என்று மக்களிடம் தவறாக அடையாளம் காட்டிக் கொண்டிருப்பதேன்? போலி மருத்துவத்தை விஞ்ஞானப் பூர்வமானது என்றும் போலி மருத்துவர்களை ஸ்பெஷலிஸ்ட்டுகள் என்றும் மக்களிடம் முன்னிலைப்படுத்தக் காரணம் என்ன? குற்றச் செயல்களுக்கு இன்றுவரை துணைபோய்க்கொண்டிருக்கக் காரணம் என்ன?

மேற்கண்ட 51 நோய்களுக்கு மருந்துகளே ஆங்கில மருத்துவத்தில் கிடையாது என்றிருக்க சட்டத்தை பகிரங்கமாகத் தூக்கியெறிந்து விட்டு மருந்துகளைக் கொடுத்து நோயாளிகளின் உயிர்ச்சக்தியை சாகடித்துக் கொண்டிருக்கும் ஆங்கில மருத்துவம், அம்மருத்துவத்தைச் சார்ந்தவர்களை ஸ்பெஷலிஸ்ட்டுகள் என்று மக்களிடையே நடமாடவிடும் இந்தத் துரோகச் செயலை மக்களே! அரசுக்கு தெரிவியுங்கள். மருத்துவச் சங்கத்தில் கேட்பதற்கு ஆளில்லை என்ற ஒரே காரணத்தால் தான் இப்படிப்பட்ட கொடூரச் செயல் நடந்துக் கொண்டிருக்கிறது.

மக்களே! இந்திய மருத்துவச் சங்கத்தை ஆங்கிலேயர்களின் மருத்துவத்தைப் பார்க்கும் டாக்டர்கள் மட்டுமே அடங்கப்பெற்ற குழுவாகப் பாதுகாத்து வருகின்றனர். அம்மருத்துவம் நோய்களைத் தடுக்கவோ, குணப்படுத்தவோ லாயக்கற்றது என்று தீர்மானித்து சட்டமாக்கிய பின்பும் அதைப்பற்றி மக்களிடம் மூச்சுக் கூட விடவில்லை.

ஷெட்யூல்-J-சட்டத்தின்படி இன்றுள்ள டயாபிடிஸ் ஸ்பெஷலிஸ்ட்டுகள், கார்டியாக் (இருதய) ஸ்பெஷலிஸ்ட்டுகள், இரைப்பை மற்றும் குடல் சம்பந்தமான ஸ்பெஷலிஸ்ட்டுகள், மூளை சம்பந்தப்பட்ட ஸ்பெஷலிஸ்ட்டுகள், தைராய்டு ஸ்பெஷலிஸ்ட்டுகள், சிறுநீரக ஸ்பெஷலிஸ்ட்டுகள் பைத்தியக்கார ஸ்பெஷலிஸ்ட்டுகள் போன்ற இவர்கள் அனை வரும், இன்னும் அனைத்து ஸ்பெஷலிஸ்ட்டுகளும் போலிகள் என்ற அடைமொழியுடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியவர்கள். மக்களே இது பற்றிய விளக்கத்தை உங்களிடமும், மறைத்து, அரசாங்கத்திடம் மறைத்தது ஏன் என்பதற்கான விளக்கத்தைக் கேளுங்கள்.

TMC இதைப் பற்றி மக்களுக்குச் சொல்லாமல் இருப்பது மக்களுக்கு செய்யும் நன்மையா? தங்கள் சங்கத்தில் உள்ள மருத்துவர்களுக்கு செய்யும் நன்மையா? தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சிலுக்குப் பதிலாக அதன் இடத்தில் அகில இந்திய ஹெல்த் கவுன்சில் என்ற அமைப்பை ஏற்படுத்தி இந்தியாவில் இருக்கும் அனைத்து மருத்துவங்களும் அடங்கப் பெற்ற சுகாதாரக் கவுன்சிலை அமைக்க வேண்டும். அதில் ஆங்கிலேயர்களின் மருத்துவத்தையும், ஒரு அங்கமாக்கி, அம்மருத்துவத்தின் அடாவடித்தனங்களை ஒரு நிலைக்குள் கட்டுப்படுத்த வேண்டும்.

மக்கள் உடல் நலன், சுகாதாரம் போன்றவைகளுக்காக அரசாங்கம் ஆற்றப்போகும் காரியங்கள் அனைத்துக்கும் அது நன்மையாக முடிவதற்கும், தீமையாக முடிவதற்கும், இந்த தார்மீகப் பொறுப்பேற்கும். உரியநடவடிக்கையிலும் இறங்க வேண்டும் என்ற சட்டப்பூர்வமான அதிகாரத்தையும் வழங்கவேண்டும். அல்லது தங்கள் உடல் நலனில் அரசாங்கம் அக்கறை கொண்டிருக்கிறது என்ற நம்பிக்கையை மக்கள் வெகு விரைவில் இழந்துவிடுவார்கள்.

அடென்லால், கால்ஸிகார்ட், ஃப்ரூஸிமைட், இன்னும் அதிக இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த அல்லது குணப்படுத்த என்று இருதய சிறப்பு நிபுணர்கள் கொடுக்கும் அனைத்தும் நச்சுக்கள், உயிரைக் குடிப்பவை. இவையனைத்தும் சிறுநீரகங்களை படிப்படியாகச் சாகடிக்கும் நச்சுக்கள். அது மட்டுமல்ல, இருதய இயக்கத்தையே பாழாக்கும். அத்துடன் உடலின் மீதமுள்ள உறுப்புக்களும் கெடும். இரத்த அழுத்தத்திற்கான இருதய ஸ்பெஷலிஸ்ட்டுகள் என்பவர்கள் போலிகள் (Indian Drugs and Cosmetics Act, 1940 Schedule-J) சட்டத்தின்படி எழுதும் மாத்திரைகள் ஒவ்வொன்றும் வயிறு, கல்லீரல், மண்ணீரல், நுரையீரல், சிறுநீரகங்கள் என்று ஒவ்வொரு உறுப்பாக சீரழிப்பவை.

போலிகள் சட்டத்தின்படி தண்டனைக்குரியவர்கள் யார் எனில், ‘எந்த டாக்டர் அதிக இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் மருந்து என்று நோயாளிகளை நம்பவைத்து ஆங்கில மருந்துகளை எழுதிக் கொடுக்கிறாரோ, அந்த மருத்துவரே ஆவார்’ என்பதாகும். சட்டத்தின்படி எந்த மருத்துவரும் அதிக இரத்த அழுத்தம் உட்பட எந்தவிதமான இருதய நோய்க்கும் குணப்படுத்தும் மருந்துகள் இவை அல்லது கட்டுப்படுத்தும் மருந்துகள் இவை என்று நோயாளிகளிடம் கூறுவாரேயானால் அவர் ஏமாற்றி தொழில்புரியும் போலி டாக்டராவார்.

ஆனால் ஆங்கில மருத்துவம், சட்டத்தை துச்சமென மதித்து அகம்பாவத்துடன் போலிகளுக்கு ‘இருதய ஸ்பெஷலிஸ்ட்’ என்று அடைமொழியைக் கொடுத்திருக்கிறது. இவர்கள் தொழில் நடத்தும் முறை எப்படி என்பதை வாசகர்களாகிய நீங்கள் நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும். உங்கள் எதிர்காலம், நம் நாட்டு மக்களின் எதிர்காலம் காக்கப்படவேண்டும் என்ற உணர்வோடு இது எழுதப்படுகிறது. உங்கள் ஒவ்வொருவர் ஊரிலும் மருந்து ஆய்வாளர்கள் இருப்பார்கள். இவர்கள் உங்கள் நலனுக்காக விழித்துக் காத்திருந்து வேலை செய்யக் கடமைப்பட்டவர்கள். நோயாளிகளாகிய நம் ஒவ்வொருவர் உயிரும் இவர்கள் கையிலே இருக்கிறது. இவர்களின் வித்தியாசமான, போக்கால்தான் இன்று ஆங்கில மருத்துவம் போலிகளுக்கு ஸ்பெஷலிஸ்ட் பட்டம் கொடுத்து சட்டத்தை மிஞ்சி நடக்கும் அளவுக்கு உங்களிடையே உலாவ விட்டிருக்கிறது.

மருந்து ஆய்வாளர்கள் கடமை என்னவென்றால் “இருதய நோய்கள் முதலாக எந்த ஒரு நோயையும் கட்டுப்படுத்தும் மருந்துகள் இவை; குணப்படுத்தும் மருந்துகள் இவை என்று கூறி, மக்களை ஏமாற்றி, நம்ப வைத்து மருந்துச் சீட்டுகளை எழுதிக் கொடுக்கும் ஆங்கில மருத்து வர்களிடம் அவர்களின் சட்டமீறுதலைப் பற்றிக் கடுமையாக எச்சரிக்கவேண்டும். அவர்கள் எழுதும் மருந்துகள் பற்றி அவற்றின் தன்மைகள் பற்றி, பக்கவிளைவுகள் பற்றி முறையாக நேர்காணல் மூலமாக பரீட்சிக்க வேண்டும். ஆங்கில மருத்துவம் அவர்களுக்கு அளித்துள்ள ஸ்பெஷலிஸ்ட் பட்டங்களை உடனடியாக நீக்கச் சொல்ல வேண்டும். தங்கள் விசிட்டிங் கார்டுகளிலிருந்தும், போர்டுகளிலிருந்தும் மறைமுகமாக மக்களை ஏமாற்றும் அந்த போலி அடைமொழிகளை உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்..

“உங்கள் உடல் நலன், சமுதாய நலன் காக்கப்பட Drug Inspectors உடனடியாக மேற்சொன்ன நடவடிக்கைகளை எடுக்கிறார்களா?” என்று கவனியுங்கள். இன்றிலிருந்து செயல்படத் தவறும் Drug Inspectorகளைத் தட்டியெழுப்பி கவனிக்கச் சொல்லுங்கள்.

Drug Inspectorகளைக் கண்டுபிடிப்பது மிக எளிதான காரியம். உங்கள் வீட்டு அருகாமையிலுள்ள எந்த ஒரு மருந்துக்கடையிலும் அவர்கள் விலாசத்தை முழுமையாகக் கேட்டு அறிந்து கொள்ளலாம். உங்கள் நன்மைக்காக உங்கள் நலன் காக்கும் நண்பர்கள். அவர்களை நீங்கள் தினமும் விழிப்புணர்வுடன் சந்தித்து விஷயங்களைச் சொல்லிக்கொடுக்க வேண்டும்.

வாசகர்களே, இந்தப் பட்டியலில் உள்ள நோய்களுக்கு ஸ்பெஷலிஸ்டுகள் என்று கூறும் ஒவ்வொருவரும் போலிகள். காரணம் சிறப்பு மருத்துவர்கள் என்ற அடைமொழி மறைமுகமாக பாமர மக்களை பெரிய அளவில் ஏமாற்றக் கூடிய தாக உள்ளது. மருத்துவமனைகளில் போர்டுகளில் காணப்படும் இந்த அடைமொழிகளை நீக்க சொல்வதில் சமுதாயமே கண்காணிப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது.

நன்றி : ‘மருந்துகளால் வரும் நோய்கள்’
ஹெல்த் டைம் வெளியீடு

(நன்றி : மாற்று மருத்துவம் ஜனவரி 2009)

அக்குப்பங்சர் விடை தேடும் வினாக்கள்

மனித மனங்களில் ஊடாடி வினைபுரிகிற போது தத்துவங்கள் பிறக்கின்றன. இவ்வாறு உருவான தத்துவங்கள் மனித குலம் எதிர்கொண்ட எல்லாக் கேள்விகளுக்கும் பதிலளிக்க முயன்றன. இப்பதில்கள் கூட எந்தளவுக்கு புற உலகத்தோடு ஒத்திசைந்திருந்தோ அந்த அளவுக்கு இவை நெடுங்காலத்துக்கு நீடிக்கும் உண்மையாய் இருந்தது. இப்பதில்கள் எந்தளவுக்கு புற உலகிலிருந்து விலகி அகவுலகம் சார்ந்திருந்ததோ அந்தளவுக்கு அப்பதில்கள் அற்ப ஆயுளில் அடுத்து வந்த கண்டுபிடிப்புகளால் காலாவதி ஆயின.

இரண்டாயித்து நூறு ஆண்டுகளுக்கு முந்தைய சீன சமுதாயம் தாவோயிசம் எனும் சிந்தனை மரபைக் கொண்டிருந்தது. இச்சிந்தனை வாழ்வு, தாழ்வு, பிறப்பு, இறப்பு... ஆகியவற்றைப் பற்றியும் தனக்கே உரிய கருத்துக்களை கொண்டிருந்தன. அதன் ஒரு பகுதியாகவே மனித குல நோய்களுக்குக்கான தீர்வாக அக்குப்பஞ்சர் முன்மொழியப்பட்டது. தாவோயச சிந்தனையின் தொடர்ச்சியாகவே நோய், நோய்க்கான காரணம், நலம், நலத்துக்கான வழிமுறை போன்றவை பற்றிய அக்குப்பஞ்சர். கோட்பாடுகள் அமைந்தன.

அக்குப்பஞ்சர் கோட்பாடுகளில் முதன்மையான சிலவற்றை மட்டும் இங்கு பார்க்கலாம்.

அ) அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில் என்பார்களே அதுபோல மனித உடலானது இயற்கையின் ஓர் அங்கம் இயற்கையின் முக்கிய மூலகங்களான நீர், மரம், நெருப்பு, பூமி, உலோகம் ஆகிய ஐந்தும் மனித உடலிலும் உள்ளது.

ஆ) தண்ணிள் மூலகமானது, உடலுக்கு ஊட்டமளிப்பதோடு உடல் நலனை பேணி வருகிறது. இம்மூலகம் பழுதடைகிற போது சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை பணிகள் பாதிக்கப்படுகின்றன. மர மூலகமானது ஜீரணம், இதயத்துடிப்பு, சுவாசம் மற்றும் அடிப்படை வளர்சிதை மாற்றத்துக்கு பொறுப்பு வகிக்கிறது. இம்மூலகச் சீர்கோட்டால் கல்லீரல் மற்றும் பித்தப்பை பணிகள் பழுதடைகின்றன.

நெருப்பு மூலகமானது இரத்த ஓட்ட மண்டலம் மற்றும் பேச்சாற்றலுக்கு காரணமாய் அமைகிறது. இதன் சீரன்மையால் இதயம் மற்றும் சிறுகுடல் பணிகள் பாதிக்கின்றன. பூமி மூலகம் உளவியல் சமநிலையை பேணுகிறது. பூமி மூலகத்தின் சமநிலை மற்ற நான்கு மூலகங்களைச் சார்ந்துள்ளது. உலோக மூலகம் நுரையீரல் மற்றும் பெருங்குடலுக்கு பொறுப்பு வகிக்கிறது. சுவாசம் மற்றும் உணவு உட்கிரகித்தலை நெறிப்படுத்துகிறது.

இ) சீனக் கண்ணோட்டப்படி யின் (Yin) மற்றும் யாங் (Yang)ன் சமநிலையில் தான் சிறப்புறுகிறது. இச்சமநிலையைப் பேணும் பணியை கீ (qi) எனும் உயிராற்றல் செய்து வருகிறது.

ஈ) சீனக் கருத்துப்படி நமது வாழ்வு முழுவதும் கீ ஆற்றலால் நிர்வகிக்கப்படுகிறது, வழி நடத்தப்படுகிறது. இந்த ஆற்றல் மரபுரீதியாக பெற்றோரிடமிருந்தும் உண்ணும் உணவிலிருந்தும் சுவாசிக்கும் காற்றிலிருந்தும் நமக்கு கிடைக்கிறது.

உ) கீ ஆற்றல் உடலின் தற்காப்புத்திறனை தூண்டி நோய்களைப் போக்குகின்றன. இந்த ஆற்றல் கண்ணால் காண முடியாத ஆற்றல் பாதைகள் மற்றும் அவற்றின் இடைத் தொடர்பு மூலம் உடலை நிர்வகிக்கிறது.

ஊ) ஓட்ட பாதைகளின் ஆற்றல் செயல்பாடு மிகும்போது அல்லது குறையும் போது நோய்கள் தோன்றுகின்றன. ஓட்டப்பாதைகளின் அமைந்துள்ள புள்ளிகளைத் தூண்டுவதன் மூலம் ஆற்றலைச் சம நிலைக்கு கொள்ளலாம்.

பெரும்பான்மையான மனிதத் துயர்களுக்கு அக்குப்பஞ்சரில் சிகிச்சை உண்டு எனப்படுகிறது. எனினும் அக்குபஞ்சர் நலமாக்கலின் முக்கிய பலன்கள் நரம்பு மண்டலம் தொடர்பான துயர்களோடு தொடர்புள்ளதாகவே உள்ளது. வலிகள், வலிப்பு, வாதம், மது போதை மீட்பு தூக்கமின்மை, மயக்கம், மரமரப்பு... எனப் பட்டியல் நீளும்.

ஆனாலும் அக்குபஞ்சரின் மூல ஆசான்களுக்கு நரம்பு மண்டலம் என ஒன்றுள்ளதோ, மூளை பற்றிய விபரங்களோ தெரியாது என்பதே விந்தையிலும் விந்தையாகும்.

அக்காலத்திய அறிவு நிலைக்கு ஏற்பவே அக்குபஞ்சரின் உடலியல் உடலியங்குயியல் அறிவுநிலை அமைந்திருந்தது. இப்போது நாம் அறிந்திருக்கும் உடலியல், உடலியங்குயியல் அறிவியல் பதினோழாம் நூற்றண்டுக்கு பின்பு வளர்ந்தவை. இவை ஆதிகால அக்குபஞ்சர் அறிஞர்கள் அறியாதவை.

">இந்நிலையில், அறிவியலின் பால் மாபெரும் வளர்ச்சியில் ஆர்வமும் உடைய யாரொருவருக்கும் அக்குபஞ்சர் தொடர்பாக சில பயங்கள் கேள்வி களாக எழுவது இயல்பே.

1) அறிவியல் உலகத்தால் பஞ்சபூத தத்துவத்திற்கு பதிலாக தனிமங்கள், அணுக்கள், புரோட்டான் நியுட்ரான், எல்க்ட்ரான் ... என கண்டுபிடிப்புகள் வளர்ந்தபின்னும் இன்னும் பஞ்சபூதங்களின் பலாபலன்கள் பற்றி அக்குபஞ்சர் தொடர்புடையவர்கள் ஆராதிப்பது ஏன்?

2) நவீன உடலியல் குறித்து மறுப்பிற்கிட மின்றி நிருவப்பட்டு ஒரு நூற்றாண்டுக்கு மேலான போதிலும் மூளை மற்றும் நரம்பு மண்டலம் முதன்மையான உறுப்பு அமைப்பு தான் என ஏற்காதது ஏன்?

3) மனித உடலின் அடிப்படை அலகு செல்கள். நரம்பு மண்டலம், மூளை மற்றும் சமூகதாக்கத்தின் கூட்டு படைப்பே மனித தனிமனித மனம்.இவைகளில் ஏற்படும் குறைபாடு களே மனித உடல் மற்றும் மன நோய்கள் என அறிவியல் உலகம் நிறுவியுள்ளது. இந்நிலையில் யின், யாங் மற்றும் கீ என்பதென்ன?

4) ஆற்றல் ஓட்டப் பாதைகள் எனப்படும் கோடுகளுக்கும் அதன் தொடர்பாக கூறப்படும் உறுப்புகளுக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா?

5) அக்குபஞ்சர் சில எல்லைகளில் மகத்தான நலமாக்கலை நல்குகின்றன என்பதில் மாறுபாடில் லை. அக்குபுள்ளிகளில் தூண்டலூட்டும் போது உடல்செயல்பாட்டில் நிகழும் மாற்றமென்ன?

இக்கேள்விகளுக்கு திட்டவட்டமாக பதில்கள் கிடைக்கும் வரை அக்குபஞ்சர் வளர்ச்சியில் சிறு தடை இருக்கவே செய்யும். இக்கேள்விகளும் இதற்கு பதில் தேடும் ஆராய்ச்சிகளும் இப்போது தான் எழுகின்றனவா என்றால் இல்லை என்பதே பதிலாகும்.

இன்றைக்கு உள்ள அளவுக்கு அக்குபஞ்சர், இவ்வளவு தூரம் வளர்ந்ததற்கு முக்கிய காரணம் 1949 ல் சேர்மன் மாசேதுங் தலைமையில் உருவான மக்கள் சீன அரசேயாகும். மார்க்சிய - லெனினிய - மாசேதுங் - பொதுவுடைமை சிந்தனையின் வழிகாட்டுதலில் நடைபெற்ற புரட்சியின் விளைவே மக்கள் சீனம். மக்கள் சீனத்தில் அறிவியலுக்கு புறம்பான, பகுத்தறிவுக்கு ஒவ்வாத பாரம்பரிய விஷயங்கள் பலவும் புறக்கணிக்கப் பட்டன. அதே வேளையில் சிறப்புமிக்க தொல்சீர் அம்சங்கள் தக்க வைத்துக் கொள்ளப்பட்டன. மேலும், அவை வளர்வதற்கான வழிமுறைகள் வகுப்பட்டன. இவ்வாறு மக்கள் சீனத்தால் தக்கவைத்துக் கொள்ளப்பட்ட தொல்சீர் அம்சங்களில் ஒன்று தான் அக்குபஞ்சர். 1950 களில் அக்குபஞ்சர் மருத்துவத்துக்கு ஆயிரக்கணக்கான சோதனைகளுடாக அறிவியல் அந்தஸ்து உருவாக்கப்பட்டது. 1958ல் சீன கம்யூனிஸ்ட் கட்சி யின் மத்திய கமிட்டி நவீன மருத்துவமுறைக்கு இணையான அந்தஸ்தை அக்குபஞ்சருக்கு வழங்கியது. இதனை இரண்டு கால்களால் நடப்போம்எனும் பிரபலமான சொலவடையின் மூலம் சேர்மன் மாசேதுங் பிரகடனப்படுத்தினார். இதன் விளைவே நவீன அறுவை சிகிச்சைகளில் அக்குபஞ்சரை பயன்படுத்தும் அக்குபஞ்சர் அனஸ்தீஸியா கண்டுபிடிக்கப்பட்டது.

1980களில் பல்வேறு அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் அக்குபஞ்சர் பயன்பாடு பற்றிய அறிவியல் ஆய்வுகளை மேற்கொண்டன.

1970களுக்கு பிறகு மத்திய அரசின் மருத்துவ ஆராய்ச்சிக்கான இந்திய கவுன்சில் அக்குபஞ்சர் பற்றிய பல்வேறு அறிவியல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது.

முன் பகுதியில் சொல்லப்பட்டுள்ளது போல எத்தனையோ அறிவியல் ஆராய்ச்சிகள் நடந்துள்ளன. அறிவியலை மட்டும் ஆதரிக்கும் பொதுவுடைமை அரசு உலமெங்கும் பரப்ப காரணமாய் இருந்துள்ளது. எனினும் பகுத்தறிவுக்கு பொருந்தாத பல விஷயங்கள் அக்குபஞ்சர் மருத்துவத்துடன் இணைத்து பேசப்படுவதேன்?

இக்கேள்விக்கான பதில் பற்றி யோசிக்கிற போது அக்குபங்சருக்கு வெளியேயுள்ள வேறு சில விஷயங்களும் மனதில் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. அவை :

(1) உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட மூன்றாம் உலக நாடு, மிகக் குறைந்த செலவில் அனைத்து மக்களின் மருத்துவ தேவை யை நிறைவேற்ற காரணமானது அக்குபஞ்சர். அத்தகையதொரு மருத்துவத்தை அறிவியல் ரீதியாகவும் நிறுவிவிட்டால் உலகின் முதன்மை மருத்துவமாக அது வளர்ந்து விடும். அப்படி வளர்ந்து விட்டால் பின்னர் அலோபதியின் கொள்ளை லாபம் தரும் மருத்துவச் சந்தை சுருங்கி விடுமல்லவா ?

(2) அலோபதி மருத்துவ திட்டங்களுக்கான நிதியுதவி என்ற பெயரில் வல்லரசுகள் ஏழை நாடுகளை கடன் வலையில் வீழ்த்துவதால் அக்குபஞ்சரின் அறிவியல்ரீதியான வளர்ச்சிக்கு முட்டுகட்டை ஏற்படுமா?

(3) அக்குபஞ்சரை பயில்வது மிகமிக எளிது. அடிப்படை கல்வித் தகுதியை நிறைவு செய்த யார் வேண்டுமானாலும் அக்குபஞ்சர் பயின்று தொழில் புரியலாம். இதனை 1991ம் ஆண்டு நடைபெற்ற 44 வது உலக சுகாதார பேரவையே ஏற்றுக்கொண்டுள்ளது. இந்நிலையில் அக்குபஞ்சர் பெருமளவு வளர்ந்துவிட்டால் அலோபதி மருத்துவக் கல்வியின் பெயரால் நடைபெறும் மிகப் பெரும் பணப்புழக்கம் உள்ள தொழில் நீடிக்குமா?

(4) அக்குபஞ்சர் வளர்ந்து அதன் எளிய சிகிச்சையாலேயே பெரும்பாலான நோய்கள் நலமாகி விட்டால் யாராவது மெடிக்கல் இன்சூரன்ஸ் கட்டுவார்களா? நட்சத்திர அந்தஸ்து வசதி கொண்ட மருத்துவமனைகளின் படுக்கைகள் நிரம்புமா?

இதுபோன்ற கேள்விகளுக்கான பதில்களுடன், அக்குபஞ்சர் ஏன் அறிவியல் ரீதியாக வளர்த்தெடுக்கப்படவில்லை என்னும் கேள்விகளுக்கான பதிலும் இணைந்துள்ளதாகவே தோன்றுகிறது.

நம் காலத்தில் அறிவியல் வளர்ச்சியும் அறிவியலாளர்களின் திறமையும் அளப்பரியது. அவர்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும், இதையும் தான்.

(இக்கட்டுரை மாற்று மருத்துவம் ஜூலை 2009 இதழில் வெளியானது)

வெங்காயத்தின் மருத்துவ குணங்கள்

வெங்காயத்தை ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம். வெங்காயம் முற்காலத்திலிருந்தே அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வரும் ஓர் உணவுப் பொருளாகும். ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, எகிப்தியர்கள் வெங்காயத்தைப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். தென்இந்தியர்களும் பழங்காலம் முதலே பயன்படுத்தி உள்ளனர். அரேபியர்கள் ஏராளமான வெங்காயத்தை உட்கொள்கிறார்கள். இன்றும் கப்ஸôவோடு வெங்காயம் இருக்கத் தவறுவதில்லை. நேபாளத்தில் வெங்காயம் கடவுளுக்கு நிவேதனம் செய்வதாகச் சொல்கிறார்கள். யூதர்கள் முற்காலத்திலேயே பயன்படுத்தி இருக்கின்றனர். மருத்துவத்தின் தந்தை எனப் போற்றப்படும் ஹிப்போகிரேட்ஸ் வெங்காயத்தின் பயனைப் பற்றிக் கூறியுள்ளார். அமெரிக்கரும், இங்கிலாந்து நாட்டவரும் சிறந்த நோய் தீர்க்கும் ஒன்றாக வெங்காயத்தைப் பயன்படுத்துகிறார்கள்.

வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெயாகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காரணமாக இருக்கிறது. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது. பலநாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால் என்ன பலன்கள் கிடைக்கும்?

1. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

2. சமஅளவு வெங்காயச் சாறு வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி குறையும்.

3. வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சமஅளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட காது இரைச்சல் மறையும்.

4. வெங்காயத்தைத் துண்டுகளாக நறுக்கி சிறிது இலவம் பிசினைத் தூள் செய்து சேர்த்து சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.

5. வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கி சாப்பிட உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்.

6. வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக் கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.

7. வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.

8. வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.

9. வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு தணியும்.

10. வெங்காயத்தை அவித்து தேன் கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.

11. வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

12. வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.

13. படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை பூசி வர மறைந்துவிடும்.

14. திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.

15. வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும் குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.

16. வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.

17. பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடித்து வர மேகநோய் நீங்கும்.

18. வெங்காயம் அவரை இலை இரண்டையும் சமஅளவு எடுத்து அரைத்து சாப்பிட மேகநோய் குறையும்.

19. வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.

20. பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தைத் தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.

21. வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.

22. வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.

23. தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்று வேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.

24. வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில் ஏற்படும் வலி நேரத்தில் தடவி வர வலி குணமாகும்.

25. நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.

26. வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர மாலைக்கண் நோய் சரியாகும்.

27. வெங்காயச் சாறையும், தேனையும் சம அளவு கலந்து கண்வலிக்கு ஒரு சொட்டுவிட கண்வலி கண் தளர்ச்சி நீங்கும்.

28. ஜலதோஷ நேரத்தில் வெங்காயத்தை முகர்ந்தால் பலன் கிட்டும்.

29. வெங்காயத்தை அரைத்து தொண்டையில் பற்றுப்போட ஏற்படும் தொண்டை வலி குறையும்.

30. பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் தின்னவேண்டும். இதனால் விஷம் இறங்கும்.

31. ஆறு வெங்காயத்தை ஐநூறு மில்லி நீரிலிட்டு கலக்கிப் பருக சிறுநீர் கடுப்பு எரிச்சல் நீங்கும்.

32. வெங்காயம் சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவி வெங்காய சாறை குடிக்க நாய் விஷம் இறங்கும் பிறகு டாக்டரிடம் செல்லலாம்.

33. வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்துக் குடிக்க மூலநோய் குணமாகும்.

34. காலரா பரவியுள்ள இடத்தில் பச்சை வெங்காயத்தை மென்று தின்ன காலரா தாக்காது.

35. ஒரு பிடி சோற்றுடன் சிறிது உப்பு நான்கு வெங்காயம் இவற்றை சேர்த்து அரைத்து ஒரு வெற்றிலையில் வைத்து நகச்சுற்றுள்ள விரலில் காலை மாலை வைத்துக்கட்ட நோய் குறையும்.

36. சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.

37. தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறுவெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடி வளரும்.

38. காக்காய் வலிப்பு நோய் உள்ளவர்கள் தினசரி ஓர் அவுன்ஸ் வெங்காயச் சாறு சாப்பிட்டுவர வலிப்பு குறையும்.

39. வெங்காயத்தை தினமும் சாப்பிட்டுவர டி.பி. நோய் குறையும்.

40. வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.

41. தேள்கொட்டிய இடத்தில் வெங்காயத்தை நசுக்கித் தேய்க்க விஷம் இறங்கும்.

42. வெங்காயத்தை பசும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டுவர தாது பலமாகும்.

43. வெங்காயம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும்.

44. தினமும் மூன்று வெங்காயம் சாப்பிட்டுவர பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும்.

45. வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட மலச்சிக்கல் குறைவும்.

46. வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப்போட தலைவலி குறையும்.

47. மாரடைப்பு நோயாளிகள். ரத்தத்தில் கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.

48. சின்னவெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும்.

49. வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சியும், மூளை பலமும் உண்டாகும்.

50. வெங்காயத்தை வதக்கிக் கொடுத்தால் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவர். ஊட்டச்சத்து கிடைக்கும்.

(மாற்று மருத்துவம் ஜனவரி 2010 இதழில் வெளியான கட்டுரை)

கொய்யாப்பழத்தின் மருத்துவ குணங்கள்

நம் உடலுக்கு வேண்டிய நல்ல சத்துக்கள் தரும் பழங்களில் கொய்யாப்பழம் முக்கியமானது. கொய்யா பச்சை நிறத்திலும் ஒரு சில வகைகள் மஞ்சள் நிறத்திலும் நல்ல நறுமணத்துடன் கிடைக்கும். கொய்யா மரங்கள் சுமார் 33 அடி உயரம் வரை வளரும். கொய்யாவின் பச்சைப் பசேலென்ற இலைகள் நறுமணத்துடன் காணப்படும். விதையில்லாத கொய்யாப் பழங்களும் உள்ளன. உஷ்ணப் பிரதேசங்களில் அதிகமாக விளையும் கொய்யாப்பழங்கள் நல்ல நறுமணம் மற்றும் இனிப்புச் சுவையுடன் சாப்பிடுவதற்கு மிகவும் உகந்தது.

மருத்துவ குணங்கள்

 கொய்யா மரத்தின் வேர், இலைகள், பட்டை மற்றும் செங்காய் இவைகளில் மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. குடல், வயிறு, பேதி போன்ற உபாதைகளுக்கு இவை பெரிதும் குணமளிக்கின்றன.

 கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து காயம் புண் இவற்றின் மேல் தடவினால் அவை விரைவில் ஆறிவிடும் கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலி நீங்கவும் உதவுகின்றன.

 கொய்யாவுக்கு சர்க்கரையைக் குறைக்கும் தன்மையுண்டு கொய்யாக் காய்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு பெருமளவு குறைய வாய்ப்புகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

 கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல் தொண்டை மற்றும் இருதய சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருகின்றன. கொய்யா மரத்தின் இளம் புதுக்கிளைகளின் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.

 கொய்யா மரத்தின் கிளைகளிலிருந்து தயாரிக்கப்படும் மற்றொரு கஷாயம் குழந்தைகளுக்கு வரும் மாந்தம் இழுப்பு, காக்காய் வலிப்பு போன்ற வியாதிகளுக்கு கொடுக்கப்படுகிறது.

 கொய்யா மரத்தின் சில பகுதிகளுடன் வேறு சில பொருட்களும் சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு கஷாயத்தை அருந்தினால் பிரசவத்திற்கு பின்பு வெளியாகும் கழிவுகளை வெளியேற்ற மிகவும் உதவுவதாக சித்த மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

(மாற்று மருத்துவம் ஜூலை 2010 இதழில் வெளியானது)

ஒற்றைத் தலைவலி, முதுவலிக்கு தீர்வாகும் அக்குபங்க்சர்

மயிரைவிட மெல்லிய ஊசியை தோலில் செருகி சிகிச்சை செய்வது அக்குபங்க்சர் முறை. சீனாவில் பிரபலமாகக் கையாளப்படும் இந்த சிகிச்சை உலகெங்கும் இப்போது பரவலாகிக்கொண்டிருக்கிறது.

ரஷ் பல்கலைக்கழகம் குழந்தைகளுக்கு வலியைக் குறைக்கவும் வாந்தி மயக்கம் போன்றவற்றை உடனே நிறுத்தவும் அக்குபங்க்சர் சிகிச்சையை மேற்கொல்வதில் நல்ல நிவாரணம் இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறது.

காரணம் தெரியாத ஒற்றைத் தலைவலி, பெண்களின் மாதாந்திர வலி, ஆர்த்திரிட்டிஸ், கீழ் முதுகு வலி போன்ற நோய்களுக்கு அக்குபங்க்சர் செய்யலாம் என்று நேஷனல் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் ஹெல்த் நிறுவனம் ஏற்கனவே சிபாரிசு செய்திருக்கிறது. இப்போது குழந்தைகளுக்கும் அதை மேற்கொள்ளலாம் என்று தெரிவித்திருக்கிறது.

உடலில் ரத்தக் குழாய்களில் இரத்தம் பாய்வது போல, நாடி எனப்படும் கண்களுக்குத் தென்படாத குழாய்களில் ஒரு வித ஆற்றலும் பாய்கிறது அதன் பெயர் கி என்று சொல்கிறார்கள். அதன் ஓட்டம் தடைபடுவதால் நோய் வரலாம் என்றும், சில இடங்களில் அதன் பாதையை மாற்றி வைத்தால் நிவாரணம் கிடைக்கும் என்றும் மூவாயிரம் வருடங்களுக்கு முந்தைய சீன மருத்துவம் கூறுகிறது. கி அந்த ஆற்றலை திசை திருப்பவும் தடுக்கவும் மெல்லிய ஊசியை குறிப்பிட்ட நாடிகளில் புகுத்துவது இதன் தத்துவம்.

அல்சருக்கு மருந்து தேன்

வயிற்றில் ஏற்படும் புண், அழற்சி, ஈரல், பித்தப்பை நோய்கள் அனைத்துக்கும் மருந்தாக தேன் அமைந்துள்ளது. அதனால்தான் வயிற்றின் நண்பன் தேன் என்கிறோம்.

ஒன்று முதல் மூன்று தேக்கரண்டி தேனை 100 மி.லி. ஆறிய வெந்நீருடன் கலந்து தினமும் காலை அல்லது இரவு நேரங்களில் வெறும் வயிற்றில் உணவு அருந்துவதற்கு முன் பருகி வர வேண்டும். இப்படி செய்தால் வயிற்றுப்புண், இரைப்பை அழற்சி ஈரல், பித்தப்பை நோய்கள் குணமாகும்.

இரைப்பையில் தேவைக்கு அதிகமாக சுரக்கப்படும் அமிலத்தின் தன்மையைக் கட்டுப்படுத்துவதுடன் அமிலத்தால் வயிற்றுப் புண்ணிற்கு ஏற்படுத்தப்படும் தூண்டுதலைக் குறைத்து, எரிச்சல், வலியை நீக்கும்.

மேலும் நீர்த்தாரைப் புண், சிறுநீரக, இதய நோய்களையும் தடுக்க வல்லது தேன்.

(மாற்று மருத்துவம் ஜூலை 2010 இதழில் வெளியானது)

சினைப்பை நீர்கட்டி (Ovrian Cyst)

குழந்தை பெண்ணாய் பிறக்கும்போதே அதன் சின்னப்பைகளில் 4 லட்சம் முதல் 5 லட்சம் வரை சினைமுட்டைகள் இருக்கிறது. குழந்தை வளர வளர இந்த எண்ணிக்கை குறைந்து 35000 முதல் 45000 ஆக குறைந்து விடுகிறது. மற்றவை சிதைந்து விடுகிறது. இருந்த போதிலும் ஒரு பெண்ணின் வாழ்நாளில் அவளது சினைப்பையில் 450லிருந்து 500 வரையிலான சினை முட்டைதான் முதிர்ச்சி அடைகிறது.

சினைப்பை அடிவயிற்றில் கர்ப்பப்பையின் இருபுறமும் ஒவ்வொன்றும் இருக்கும். ஒவ்வொரு சினைப்பையும் திராட்சை பழ அளவில் இருக்கும். இச்சினைப்பைகளில் உற்பத்தியாகும் ஹார்மோன்கள் அவள் வாழ்வில் உடலளவிலும், மனதளவிலும் ஏற்படும் மாற்றங்களுக்கு பொறுப்பேற்கிறது.

சிறுமியாக இருந்து குமரி பருவத்தை எட்டும் காலத்தில் சுமார் 12 வயதிலிருந்து 15 வயதிற்குள் உடளவில் மாற்றம் ஏற்படத்துவங்குகிறது. மார்பகம் வெளிப்படையாக பெரிதாக வளரத் துவங்குதல். அக்குள் பாகங்களில், பிறப்புறுப்பு பாகங்களில் முடி முளைக்கத் துவங்குதல் போன்ற செயல்கள் நடைபெறுகிறது. இச்செயல்களுக்கு மூல காரணமாக இருப்பவை சினைப்பையில் உற்பத்தியாகும் பெண்களுக்கே உரிய முக்கியமான ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டொரோன் எனும் இரு ஹார்மோன் ஆகும். இந்த இரு ஹார்மோன்களால்தான் பெண் பருவமடைகிறாள். பருவமடைந்த பின்பு மாதவிடாய் முற்று பெரும் வரை ஒவ்வொரு மாதமும் இந்த ஹார்மோன் உத்தரவுப்படிதான் கருத்தரிப்பதற்கான வாய்ப்பிற்கு தயார் ஆகிறாள்.

ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் செயல்பாடு.

சினைமுட்டையை வெளியிடுவதற்கும், பெண் உடலில் தேவையற்ற முடி வளருவதை (முகத்தில் மீசை, தாடி) தடுக்கவும் குரலில் மாற்றமடைந்து ஆண் குரல் போல் ஆகாமல் இருக்கவும், மாதவிடாய் மாதமாதம் முறையாக வெளியாவதற்கும், விடாய் வெளியான 5வது நாளிலிருந்து 14ஆம் நாள் வரை இச் சுரப்பு அதிகமிருக்கும். சினைப்பையில் கருமுட்டை வளர ஆரம்பிக்கும். 14வது நாள் சினைமுட்டை சினைப்பையிலிருந்து வெளியேறி சினைக்குழாய் வழியே ஆண் மகனின் உயிரணுவை எதிர்பார்த்து தனது பயணத்தை துவங்கும் இந்நாளில் தம்பதியர் இணைவது கர்ப்பதரிப்புக்கு சாத்தியமாகும்.

ப்ரோஜெஸ்ட்ரோன்

விடாய் வெளியான 14வது நாள் முதல் விடாய் வெளியாகும் நாள் வரை அதிகமாக இருக்கும். எதற்காக என்றால் கர்ப்பப்பையின் உள்ளே உள்ள ஜவ்வு அதிகமானதாக தென்படும். ஒரு வேளை தம்பதியர் ஒன்று கூடி கருத்தரிப்பு ஏற்படும் போது கருவை கர்ப்பப்பை தாங்கிக் கொள்ள ஏதுவாக மெத்தை போல் உட்புறச்சுவரை உருவாக்கவும், கருவாகவில்லை என்றால் உட்புற சுவருக்கு இரத்த ஓட்டம் குறையும். ஹார்மோன் உற்பத்தியும் குறையும். கர்ப்பப்பை உட்புற சுவரில் வந்து உட்கார்ந்த சினைமுட்டை ஆணின் உயிரணு தன்னை வந்து சேராததால் ஏமாற்றம் அடைந்து முதிர்ந்து கர்ப்பப்பை உட்வுற சுவர் சுருங்கி சதையும், இரத்தமுமாக சிலமாற்றங்கள் ஏற்பட்டு உதிர போக்காக வெளியாகும்.

சினைப்பை நீர்கட்டி அறிகுறிகள்

மாதவிடாய் சுழற்சி மாதமாதம் சீராக இல்லாமல் தாமதமாக வருவது, மூன்று மாதம், இரண்டு மாதம் என தாமதமாக வெளியாதல் போன்ற நிலை இருந்தால் சினைப்பையின் ஹார்மோன் குறைவினால் விடாய் தாமதம் ஏற்படும். மாதம் ஒரு சினை முட்டையை சினைப்பை விடுவிப்பது இயற்கையான நிகழ்வு. இந்நிகழ்வில் தடை ஏற்படும் போது சினைப்பையில் சிறு, சிறு, நீர் கட்டி தோன்றி விடுகின்றன. இதை Polycystic ovary disorder (Pcod) என்பர். இதை ஸ்கேன் பரிசோதனை மூலம் கண்டறிந்து அக்குப் பஞ்சர் சிகிச்சையின் மூலம் சரிசெய்யலாம். மேலும் சினைப்பை நீர்கட்டி என்பது நோயல்ல, குறைபாடுதான் சினைமுட்டைகள் வெளிவராத காரணத்தால் உண்டாகும் இந்த பிரச்சனை பல்வேறு வயதிலுள்ள பெண்களை பாதிக்கலாம். அந்தந்த வயதினருக்கு தகுந்தாற்போல. அக்குப்பங்சர், ஹோமியோபதி சிகிச்சை, உடற்பயிற்சி, உடல் எடையை குறைப்பது போன்ற முறைகளை கடை பிடித்தால் கருத்தரிப்பதிலும் குழந்தை பிறப்பதிலும் பிரச்சனை வராமல் தடுக்கலாம். மாத விடாயை ஒழுங்குபடுத்தலாம். சினைப்பை நீர்க்கட்டி இருந்தால் உடல் பருமன் ஏற்படும். மாதவிடாய் ஒழுங்குபடுத்த கொடுக்கப்படும் ஹார்மோன் மாத்திரைகளாலும் உடல் பருமன் அதிகரிக்கும். சினைப்பையில் உற்பத்தியாகும் முக்கிய இரு ஹார்மோன்களின் திருவிளையாடல்களே சினைப்பை நீர்கட்டி உருவாக காரணமாகிறது. சில சமயங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட சிறுசிறு கட்டிகள் தோன்றக்கக் கூடும்.

சினைப்பை நீர்க்கட்டிக்கான அக்குப்பஞ்சர் புள்ளிகள் : DU:20, UB:60, CV:3, St:29, SP:6, K.3 10

உணவு வகை - பழக்கம்

இறைச்சி வகை தவிர்த்தல் நலம்

சுரைக்காய், தண்டுக்கீரை, உணவில் சேர்த்தல் நலம்

மாதுளம்பழம் சினைப்பை, கர்ப்பப்பை குறைபாடுகளை சீராக்க உதவும்.