வியாழன், 21 ஏப்ரல், 2011

அக்குபங்க்சர் ஒரு வாழ்க்கை அறிவியல்

அக்குபங்க்சர் இன்றைக்கு ஆங்கில மருத்துவர்கள் கேட்க விரும்பாத ஒரு பெயர் , ஏன் என்றால் கடந்த ஒரு நூறாண்டாக மக்களிடம் அவர்கள் உருவாக்கிய மாயை அக்குபஞ்சர் நிருபுனர்களால் உடைத்து எறியப்பட்டதுதான் ,உதாரணமாக ஆங்கில மருத்துவம் சர்க்கரை நோய் பற்றி அதன் அடிப்படை காரணமாக கணையத்திலிருந்து சுரக்கும் இன்சுலின் பற்றாக்குறைதான் என்று கூறுகிறது .இவ்வளவு நாளாக முறையாக இருந்த திடீரென குறைய காரணம் என்ன ?அதுவும் நம் உடல் முழுவதும் பல வகையான சுரப்பிகள் ஒழுங்காக இருக்கும் போது இந்த ஒரு சுரப்பி மட்டும் ஏன் திடீரென குறைகிறது ?முன்பு லட்சத்துக்கு ஒருவருக்கு வந்து கொண்டிருந்த சர்க்கரை நோய் இப்போது உலகையே பயமுறுத்தும் ஆட்கொல்லி நோயாக எப்படி மாறியது?இந்த கேள்விகளுக்கெல்லாம் ஆங்கில மருத்துவத்தின் ஒரே பதில் இன்னும் அராய்ச்சி முடியவில்லை என்பது மட்டும் தான் , சர்க்கரை நோய்க்கான காரணத்தையும் அதன் சிகிச்சையும் மிக எளிதாக முன்வைக்கிறது அக்குபங்க்சர் . நம் முறையற்ற உணவு பழக்கம் மற்றும் ஜீரண உறுப்புக்களின் இயக்ககுறைவு காரணமாக ,செரிமானத்தின் இறுதி எரிபொருளான குளுக்கோஸ் தரம் குறைந்ததாக கிடைக்கிறது .எப்படி கொழுப்பில் தரம் குறைந்த ,தரம் கூடிய வகைகள் உள்ளனவோ அதே போல குளுக்கொசிலும் இரு வகைகள் உள்ளன .இப்படி செரிமானம் மூலம் கிடைக்ககூடிய குளுக்கோஸின் தரம் தான் இன்சுலின் சுரப்பின் அளவை தீர்மானிக்கின்றது .பாதி அளவே தரம் உள்ள குளுக்கோஸ் செரிமானத்தில் கிடைக்குமானால் வழக்கமாக சுரக்கும் இன்சுலின் அளவு பாதியாக குறையும் .தரம் குறைந்த குளுக்கோஸ் தொடர்ந்து உற்பத்தியாகுமானால் இன்சுலின் அளவு குறைந்து கொண்டே போகும் .தரம் குறைந்த குளுக்கோஸ் இரத்தத்திலிருந்து சிறுநீரக பிரிக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறது .அதிகப்படியான தரம் குறைந்த குளுக்கோஸ் உருவாகும்போது அதிகப்படியான சிறுநீர் வெளியேறும் .இந்த நிலையில் அதிகமான பசியும் ,உடல் மெலிவும் ஏற்படும் .உடலில் இருந்து சிறுநீராக வெளியேறும் தரம் குறைந்த குளுக்கோஸை செயற்கையாக மருந்து மாத்திரை மூலம் உடலிலேயே அடக்கி வைக்க முயன்றால் சிறுநீரகம் படிப்படியாக செயலிழக்கும் . சர்க்கரை நோய்க்கு அடிப்படை காரணமே இரத்தத்தில் உள்ள தரம் குறைந்த குளுக்கோஸின் பெருக்கம் தான் ,இதை அக்குபஞ்சர் சிகிச்சை மூலம் கட்டுப்படுத்தி ,சீர் செய்தால் தரம் குறைந்த குளுக்கோஸ் சிறுநீர் மூலம் முழுமையாக வெளியேறும் .உடலுக்கு தேவையான தரம் உயர்ந்த குளுக்கோஸ் கிடைக்கும் .இன்சுலின் சுரப்பு தானாகவே அதிகரித்து உடல் நலம் திரும்பிவிடும் . நன்றி ;செயத் அபுதாகிர் , அக்குபங்க்சர் நிபுணர்,கோவை